|
Wednesday Nov 19, 2008 கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் உள்ளிட்ட படங்களின் தொடர் வெற்றி நடிகர் கரனை ரொம்பவே மாற்றி விட்டது.
யாகியாபாய் எனும் எப். எம்.எஸ். டிஸ்ட்ரிபியூட்டர் முதன் முதலாக கரனை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க இருந்தார். ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய இயக்குனரான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த இப்படத்தின் கதையை கேட்ட கரன், டபுள் ஓ.கே. சொல்லிவிட்டு கடைசி வரை சம்பளம் பற்றி சொல்லாமமல், ஆபீஸ் போடுங்கள், டிஸ்கஷன் செய்யுங்கள் என்று கட்டளையிட... வடபழனியில் புரடக்ஷன் ஆபீஸ், அது- இது என்று படத்திற்காக ஆரம்ப நிலையிலலேயே பல லட்சங்கள் செலவாகி விட்டன. இந்நிலையில் கால்ஷீட் கேட்கப்போன யாகாயா பாயிடம் ரூ.1 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் கரன். ஆடிப்போன புரடியூசர் ஆபீஸை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டாராம்.
|