|
Saturday Nov 08, 2008 தசாவதாராம் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் படம் மர்மயோகி. இந்த படத்தில் நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, ஷோபனா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
சரித்திரகால படமான இந்த மர்யோகி சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கவிருந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை படத்தில் சூட்டிங் இன்று வரை தொடங்கவில்லை. இதுபற்றி கோலிவுட் வட்டாரத்தில் விசாரிக்கையில், படத்தின் மெகா பட்ஜெட்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் தயாரிப்பு ஜகா வாங்கியதால் மர்மயோகி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.
|